சன்மார்க்கம் என்றால் என்ன? என்பதை முதலில் சன்மார்க்கி என்று சொல்லும் நீ உணர்ந்து கொள்!? "சகலரும் சேர்ந்தது தான் சன்மார்க்கம்!" உலகில் உள்ள எல்லா நாட்டவர்களும் எல்லா ஜாதி மற்றும் பிரிவினரும் எல்லாம் வல்ல இறைவனின் , ஒரே இறைவன் தான் உலகுக்கு என்று உணர்த்தி நாம் எல்லோரும் அந்த ஒரே இறைவனின் பிள்ளைகளே! நாம் அனைவரும் உலக மக்களாகிய அனைவரும் சகோதர சகோதிரிகளே என அறிய செய்ய வேண்டும்! உணர செய்ய வேண்டும்! அது தான் சன்மார்க்கம்!
ஊரோடு ஒத்து வாழ்! கூடி வாழ் ! என்று ஞானிகள் கூறியது எதற்காக?! "ஒன்றாக காண்பதுவே காட்சி " இப்படி வாழ்பவன் தான் சன்மார்க்கி!
துவேசம் காண்பிப்பவன் ஆணவம் கொள்பவன் சன்மார்க்கி அல்ல! விபூதி பூசுவது பூசாமல் இருப்பதுவும் சன்மார்க்கம் அல்ல!
தர்ம சாலையிலே மேட்டுக்குப்பத்தில் எதற்காக விபூதி பிரசாதம் கொடுக்கிறீர்கள்?!
வள்ளல் பெருமான் காட்டிய ஞான பாதையில் பீடு நடை போடுங்கள். எம்மதத்தவர்களையும் அரவணைத்து சன்மார்க்கம் பற்றி எடுத்து கூறுங்கள்!
ஜீவகாருண்யம் என்றால் அன்பு! மனிதர்கள் மட்டுமல்லாது எல்லா ஜீவர்களிடத்தும் காட்டும் அன்பு ! சாப்பாடு போடுவதும் அதில் ஒன்று தான்! சாப்பாடு போடுவது மட்டும் தான் ஜீவகாருண்யம் என்று தவறாக கருதி விடாதீர்கள்!
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக