செவ்வாய், 12 மார்ச், 2013

மந்திரம், தந்திரம் எல்லாம் என்ன?

மந்திரம், தந்திரம் எல்லாம் என்ன என்று சொல்கிறார்.

”மந்திர மாவதும் மாமருந் தாவதும்
தந்திர மாவதும் தானங்கள் ஆவதும்
சுந்தர மாவதும் தூய்நெறி ஆவதும்
எந்தை பிரான் தன் இணையடி தானே”

இந்த பாடலில் ஒரு கடினமும் இல்லை..... மந்திரம், தந்திரம், தானம், சுந்தரம், தூய்நெறி இது அனைத்தும் எல்லாம்...இறைவன் திருவடியே - பிரான்தன் இணையடி. இதை பிடித்தால் போதும்.... நீங்கள் மந்திரம், தந்திரம் & தானம் எதுவும் செய்ய வேண்டாம்... இதற்குள்ளே அடங்கி விடும் என்று சொல்கிறார்.

இதற்க்கு மேலான மந்திரம் எல்லாம் ஒன்றும் உலகத்தில் கிடையாது....இதனைத்தான் வள்ளுவர் சொல்கிறார்...

”பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.”

திருமூலர் சொல்கிற... இறைவன் திருவடியும் மற்றும் தமிழ்னாட்டிற்க்கே வான்புகழ் தந்த எம் நாயகர் “வள்ளுவ பெருந்தகையும்” சொல்கிற இறைவன் திருவடியும் ஒன்றுதான்... அதுவே நமது... கண்கள். இதை பற்றி பிடிக்கவில்லை எனில் பிறவி என்னும் பெருங்கடலை தாண்ட முடியாது என்றும் சொல்கிறார்.

நான் பதிவதில் உங்களுக்கு நம்பிக்கை வர வில்லை எனில்... சிறிது சிந்தியுங்கள்.... ஒளியுடல் அடைந்த வள்ளல் பெருமான் இந்த பாடலை படிக்காமலா இருந்திருப்பார்... மேலும் அவர் நம்க்கு எதையும் மறைக்காமல்.. வெட்ட வெளிச்சமாக பாடினார். கருணை வள்ளல் அல்லவா எம்து குரு நாதர்......

"என் இருகண்காள் உமது பெருந்தவம் எப்புவனத்தில் யார்தான் செய்வர்"

2 கருத்துகள்:

Popular Posts