வெள்ளி, 9 மார்ச், 2012

திருவடி மெய்ப்பொருள் எது?

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி.

சாத்திரங்கள் எல்லாம் தடு மாற்றம்
சொல்வதன்றி நேத்திரங்கள் போல் காட்ட நேராவே - திருஅருட்பா

ஒன்றாகிய இறைவனை இரு கண்களாகிய ஆறு

வட்டங்கள் கடந்து ஏழு திரைகள் விலக்கி

ஆன்மஜோதியை  நம் உள் காண வாரீர்
(ஞான சற்குரு சிவசெல்வராஜ்)

நின் திருவடித் தியானம் இல்லாமல் அவமே
சிறு தெய்வ நெறிசெல்லும் மானிடப் பேய்கள் பால்
சேராமை எற்க ருளுவாய் -

அம்மை திருப்பதிகம்(வள்ளலார் )

என் கண் மணியுள் இருக்கும் தலைவ
நின்னைக் காணவே என்ன தவஞ்செய் தேன் 

- மெய்யருள்வியப்பு (வள்ளலார் )

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் -
நண்ணாய் கேள் பார்க்க வேண்டும்தனையும்
பத்தரை மாற்றுத்தங்கம் ஆக்கப் போகாதோ உன்னால்.

(பட்டினத்தார்)

கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும் பாவைநீ - (சிவவாக்கியர்)

எங்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!(பாரதியார்)

கஞ்சமலை சித்தகுரோ கண்ணொளியாய் வந்திடுவீர் 

(கந்த குரு கவசம்)

எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்

எண்ணிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற 

தெய்வம் தூண்டாத மணி விளக்காய் 
துலங்குகின்ற தெய்வம்
(வள்ளலார் )

1 கருத்து:

Popular Posts