ஞாயிறு, 4 மார்ச், 2012

நடு கண்ணை திறப்பது எப்படி ?


சிறுபிள்ளையாக இருக்கும் போது அப்பா அம்மா தான் பார்த்து கொண்டனர். பேச தெரியாது கேட்க தெரியாது. அப்பா அம்மா பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். அதைவிட 1000  மடங்கு மேல் குரு பார்த்து கொள்வார். அதைவிட 1000  மடங்கு மேல் இறைவன் பார்த்து கொள்வார். இறைவன் அருள் புரிவார்.


குரு அருள் பெற்று தான் இறைவன் அருள் பெற முடியும்.

குருவின் பாதத்தில் சரண் அடைந்து தவம் செய்யணும். 



இன்ற நற்றாயினும்  இனிய பெருந்தயவு
ஆன்ற சிற்சபையில்  அருட்பெருஞ்ஜோதி

தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே  - சிவபுராணம்

ஞான சற்குரு சிவசெல்வராஜ் அருளியது
 <iframe width="420" height="315" src="http://www.youtube.com/embed/Llvf-lnAOcY" frameborder="0" allowfullscreen></iframe>


அருட்பெருஞ்சோதி அகவல் 

பரமுட னபரம் பகர்நிலை யிவையினத்
திரமுற வருளிய திருவருட் குருவே .1040

மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
றிதிநிலை யனைத்துந் தொரிந்தசற் குருவே

கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
குணமுறத் தொரித்துட் குலவுசற் குருவே

பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
மதியுறத் தொரித்துள் வயங்குசற் குருவே

பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே

பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
வரமுற வளர்த்து வயங்குசற் குருவே .1050

சிவரக சியமெலாந் தொரிவித் தெனக்கே
நவநிலை காட்டிய ஞானசற் குருவே

சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
அத்தகை தொரித்த வருட்சிவ குருவே

அறிபவை யெல்லா மறிவித்தென் னுள்ளே
பிறிவற விளங்கும் பொரியசற் குருவே

கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே
வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே

காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
மாண்பத மளித்து வயங்குசற் குருவே .1060

செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே

உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
பண்பினில் விளங்கும் பரமசற் குருவே

சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே

சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே

எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
வல்லா னெனவெனை வைத்தசற் குருவே .1070

1 கருத்து:

Popular Posts