திங்கள், 29 நவம்பர், 2021

கண்மணி உள்குகை - அக்கினி குஞ்சு ஒன்று கண்டேன்

“பொந்தின்னிடைத் தேனூறிய பொழில் சூழ்புள மங்கை"
பாடல் 173

நம் கண்மணி உள்குகை - பொந்து போல் உள்ளதல்லவா? 

இரு கண் பொந்தில் புகுந்து உள் போனாலே அமுதம் தேனூறி வருவதை உட்கொள்ளலாம்! 
தவ அனுபவ நிலை! "அக்கினி குஞ்சு ஒன்று கண்டேன் ஆங்கதை ஓர் பொந்தினில் வைத்தேன் வெந்து தணலானது" என்று பாரதி பாடினானே புரியுமா யாருக்காவது? 

திருஞான சம்பந்தர் சுட்டிக்காட்டிய பொந்து தான் அது! அங்கே தேனூறி நிரம்பி சூழ்ந்திருக்க அங்கே இருக்கிறாள் மங்கை - வாலை! கன்னி'ய'குமரி! வேறு எம்மதமும் கூறாத ஞான அமுதம் பெறும் நிலை!

 நம் நாட்டு ஞானிகள் பலர் கூறுகின்றனர். இதுவே ஞானம்!


மூவர் உணர்ந்த முக்கண் .பக்கம்:34
குருவின் திருவடி சரணம் சரணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts