ஞாயிறு, 1 மார்ச், 2020

அக்னி கலையிலிருந்து இரண்டாக பிரிந்து இரு நாடி வழி இரு கண்களில் துலங்குகிறது!



"கண்ணிலான் சுடர் காணிய விழைந்த கருத்தை..பாடல் 8
கண்ணில்லாதவன் ஒளியை காண முடியுமா?

கண்களில் ஒளியாக துலங்குகிறான் இறைவன்!

கண்களில் ஒளியில்லாதவன் குருடன்! கண்களில் துலங்கும் ஒளி உள்ளே அக்னி கலையிலிருந்து இரண்டாக பிரிந்து இரு நாடி வழி இரு கண்களில் துலங்குகிறது!


அதனால் பார்க்கும் ஆறறல் பெறுகிறான்.
அக்னி கலை ஒளி இரு நாடி வழி இரு கண்ணில் வராதவன் பார்வை இல்லாதவன்.
பார்க்கின்ற ஆற்றல் பெற்றவன் உணர்வால் ஒளியை பெருக்கி அதிவிரைவில்
வினையறுத்து ஞானம் பெற முடியும்!


பார்வை இல்லாதவனும் ஞானம் பெறலாம்.! இறைவன் அருள்வார்.!
உள்ளே அக்னி கலையில் கருத்தை செலுத்தி தவம் செய்ய வேண்டும்.
சற்று கடினமான செயல்தான்!இருப்பினும் முயன்றால் முடியாதது ஒன்றுண்டோ?

அருள்மயமான இறைவன் அருள்புரியாது போய்விடுவாரா?!
சதாசர்வ காலமும் இறைவனை நினைத்து உணர்ந்து நெகிழ்ந்தால்
கண்ணில்லாதவனுக்கும் காட்சி கொடுப்பார் கருணைகடலான கடவுள்!

ஞான சற்குரு திரு சிவ செல்வராஜ் ஐயா.
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞான உரை இரண்டாம் பகுதி
பக்கம்:31

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts