செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

இறைவன் திருவடியை நினைக்க உணர??

போதைக்கு அடிமையாகாதே அறிவு துலங்க வேண்டுமே தவிரே மயங்க கூடாது!

தப்பு செய்தால் தண்டனை கிட்டும். யாரும் தப்ப முடியாது. அரசாங்கத்திடம் தப்பலாம் ஆண்டவனிடம் தப்ப முடியாது! வினை விதைத்தவன் வினையறுத்தே ஆக வேண்டும்!இதற்க்கு யாரும் விதிவிலக்கு அல்ல! நல்லதே நினைப்போம்!நல்லதே சொல்வோம்! நல்லதே சொல்வோம்! நல்லதே நடக்கும்!

இறைவன் பாதமாகிய திருவடிகளை நினைக்க வேண்டுமானால் அவன் நல்லறம் செய்பவனாக இருத்தல்  வேண்டும். நன்னெறி வழி நடப்பவனாக இருக்க வேண்டும்! சைவ உணவு உட்கொள்பவனாக
இருக்க வேண்டும்! பஞ்ச மா பாதகங்கள் புரியாதவனாக இருக்க வேண்டும்! இப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்தவனாலேயே இறைவன் திருவடியை நினைக்க உணர முடியும்! 

கண்மணி ஒளியில் நின்று நிலைத்து உள்ளே உற்று உற்று பார்க்க அகத்துள்ளே துலங்கும் ஆத்ம சோதியை காணலாம். அங்ஙனம் கண்டவர்களே தன்னை உணர்ந்தவர்களே
சித்தர்கள் ஆவார்கள்! இங்ஙனம் தன்னை உணர்ந்த சித்தர்கள் ஞானிகளை பணிந்து அவர் திருவடியே கதி என சரணாகதி அடைந்தோமானால் அவருளாலே ஆசியாலே அவருக்கு முக்தி கொடுத்த இறைவன் நமக்கு முக்தி தர நம் முன்பு வருவார் ! அருள்வார்.
இது சத்தியம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts