புதன், 24 ஏப்ரல், 2024

எல்லோர் உள்ளிலும் இறைவன் இருக்கிறான் !



"ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்"

அன்னதானம், பசித்த யாராயினும் அவர் யார் என விசாரியாமல் பசிக்கு உணவு கொடுக்கணும் ! சுத்த சைவ உணவையே வழங்க வேண்டும்.

பணக்காரனும் பசிக்கு சோறுதானே சாப்பிட வேண்டும் பணத்தையா சாப்பிடுவான் !
எல்லோருக்கும் எல்லா ஜீவராசிகளுக்கு உணவு கொடுங்கள் !

ஜீவனுக்கு கொடுக்கும் உணவு சிவனுக்கே வழங்கும் நைவேத்தியமே !

அன்னதானத்தை விட மேலானது ஞானதானம் !

ஞானதானம் யார்க்கும் சொல்லலாம் ! பாவி துஷ்டன் ஆண் பெண் என்றெல்லாம் பார்க்க வேண்டாம் !

எல்லோர் உள்ளிலும் இறைவன் இருக்கிறான் ! உள்ளிருக்கும் சிவனை ஒவ்வொரு ஜீவனுக்கும் உணர்த்துங்கள் ! இதுவே ஞானதானம் !

தானத்தில் சிறந்தது ஞானதானமே !

" அன்ன சத்திரம் ஆயிரம் கட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்றல்லவா !"

என்ன எழுத்து ' அ ' ' உ ' என்ற எட்டையும் இரண்டையுமே !
இதுவே ஞான எழுத்து ! ஞானம் தரும் எழுத்து ! நம் தலை எழுத்தை மாற்றும் எழுத்து ! ஜீவனை சிவனாக்கும் எழுத்து !  லட்சம் பேர்களுக்கு சோறு போடுவதை விட ஒரு மனிதன் ஆத்ம ஞானம் பெற ஞானதானம் செய்வதே சாலச் சிறந்தது !! அடியேன் இங்ஙனம் சுமார் 1000-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஞானதானம் செய்துள்ளேன். இறைவன் அருள்கிறான் அடியேன் தானம் செய்கிறேன் ! 

அடியேனுக்கு இந்த ஜீவனை சிவனாக்கும் வேலை மட்டுமே !

வேறு வேலை கிடையாது !
சோம்பி இருக்கிறேன் !
சும்மா இருக்கிறேன் !

எனவே தான் அழைக்கிறேன் யாராயினும் வரலாம் ஞானதானம் பெறலாம் !
கன்னியாகுமரி வருக ! அருள் பெறுக !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

Popular Posts