மனோலயம் வாய்ந்திலனேல் சனன மரணமென்னும்
கடற் கென் செய்வேன்
மனம் லயம் ஆகாவிட்டால் பிறப்பு இறப்பு எனும் கடலில் ஆழ வேண்டியதுதான்.
மனம் லயம் ஆகும் இடம் ஆலயம். அது தணிகை மலை. நம் அனைத்து துர்குணங்களும் தணிந்தால் - தணியும் இடமே ஆலயம் - தணிகாசலம். குணம் மனதின் வெளிப்பாடு தானே. குறை தணியும் இடம் மனம் லயம் ஆகும் இடம்.அ லயமானால் மனம் லயமானால் ஒளி - இறைவன் - ஆத்மாவை காணலாம்.கண்டால் பிறப்பு இறப்பு இல்லை. மனம் அ வில் வலது கண்ணில் லயமாகுமானால் மனம் இருப்பது கண்தானே!
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
செவ்வாய், 25 மார்ச், 2014
சனி, 8 மார்ச், 2014
உயிர் ஒளியை ஓங்க செய்தல்!
அடியே னுடையாக்கை
புளியம் பழமொத் திருந்தேன்
புளியம் பழமொத் திருந்தேன்
நம் மானுட சரீரம் புளியம் பழம் போல் உள்ளதே! புளி பிஞ்சாக இருக்கும்போது மேலே உள்ள தோட்டோடு ஒட்டியே இருக்கும்! நன்றாக விளைய விளைய பழம் வேறு ஓடு வேறாகிவிடும்! இறைவனை அறியாதபோது பிஞ்சு புளி என உடலோடு ஒட்டியே இருந்தோம்.! தவம் - கண்மணி பெருக பெருக காய் - பழமாவது போல் நம் உள்ளொளி பெருகி உயிர் ஒளி பெருகும்போது பழமாகி விடுவோம். பக்குவமாகி விடுவோம்! உடல் பற்றின்றி உயிரை பற்றியே பரம் பொருளை அடைந்து விடலாம்!
விட்டதடி ஆசை புளியம்பழத்தொட்டொடு என்பர்! நாம் உடலை வெறுக்க வேண்டாம்! உயிரை - உயிர் ஒளியை ஓங்க செய்தாலே போதும்! உடல் பக்குவம் ஆகிவிடும்! இது புரியாத யோகிகள் உடலை அலட்சிய படுத்தி கெடுத்துகொள்வர்! இது மாபெரும் தவறு! பட்டினி கிடந்து உடலை வருத்தி கடுமையான யோகம் செய்வர்! தவறு!உடலை புன்னாக்கதீர்! உயிரை போற்றுங்கள்! இன்னும் சிலர் உடல் முக்கியம் என கருதி காய சித்திக்காக கல்பங்கள் மூலிகை சாப்பிடுவர். இது அதைவிட முட்டாள்தனம்! வெறும் உடலை வைத்து என்ன செய்ய! இதில் சூட்சுமம் என்னவென்றால் நீங்கள் உயிரை வளர்த்தல் போதும் உடல் பக்குவபட்டுவிடும்!
"உடம்பினை வளர்க்கும் உபாயம் அறிந்து உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!" என்று திருமூலர் வெகு அழகாக கூறுகிறார். உயிர் வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபாயம்! அ - வில் உ -வில் ஒளியை பெருக்க செய்வதே அந்த உபாயம்! இதுவே மதியாகும்!
திருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
வெண்ணிலாகக் கண்ணி "தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரம் நீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே " தன்னை அறிந்தாலே இன்பமுறலாம்...