திங்கள், 8 ஏப்ரல், 2024

தோணி போல் காணு மடா அந்த வீடு

🔥திருமந்திரம் 1554 - ஞானவிளக்கம்🔥

"அறிவுடன் கூடி அழைத்ததோர் தோணி"

நம் கண்ணே "தோணி" என்கிறார் !

தோணி போல் காணு மடா அந்த வீடு என்கிறார் ஒரு சித்தர் !
திருமூலரும் அந்த வீடு கண்ணாகிய வீட்டை தோணி என்றே பரிபாஷையாக கூறுகிறார் !


குருதீட்சை பெற்று தெளிந்து அறிவாக கண்மணி ஒளியில் நிலைத்து தவம் செய்பவரே 
பெறுவர் ஞானம் !

தோணியிலே - கண்ணிலே ஏற்றும் கனல் உள்ளே ஆத்மஸ்தானத்தால் ஈர்க்கப்படும் !

அறிவு துலங்கும் ஆத்மஸ்தானம் அழைத்ததாக கூறுவது இந்நிலையே !

இப்போது தோணியில் வேண்டாத குப்பைகள் பெரும்பாரமாக இருக்கின்றது.

தோணி அக்கரையை அடைய வேண்டாத மும்மலக் குப்பை பாரத்தை கடலில் தூக்கி வீச வேண்டும் ! பாரம் இல்லையெனில் தோணியை விரைந்து ஒட்டி அக்கரையை அடையலாம் !

அக்கரை சேர மிகுந்த அக்கறை வேண்டும் !

அக்கரையில் அல்லவா இருக்குது ஆனந்தம் தரும் அமுதம் !

"இக்கரை கடந்திடில் அக்கரையே இருப்பது சிதம்பர சர்க்கரையே"
 என வள்ளலார் பாடி மகிழ்கிறார் ! தோணியில் ஏறித்தான் போக முடியும் !


சீர்காழியிலே கோயில் கொண்ட இறைவன் திருநாமம் தோணியப்பர் !
கண்ணே தோணி ! இறைவனையடைய உதவும் பிரயாணம் செய்ய தேவை !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com

Popular Posts